கொலைசெய்யப்பட்டு நெடுஞ்சாலையில் எறியப்பட்ட இளைஞன்

கொலைசெய்யப்பட்டு நெடுஞ்சாலையில் எறியப்பட்ட இளைஞன்: இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு நெடுஞ்சாலையில் எறியப்பட்டிருந்தபோது பொலிஸார் மீட்டுள்ளனர்.
அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
காசாவில் 12300 பெண்கள் படுகொலை
