1அனுஷ

ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் பெப்ரவரி ஆறாந்திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க சென்றிருந்தார். அப்போது நான்கு கோடியே 60 இலட்சம் ரூபாய் ஈட்டியதற்கான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டார். அதனால், அவரை அதிகாரிகள் கைதுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.