தேசபந்து தென்னக்கோன் சிஐடியால் கைது

தேசபந்துவை நீக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார்.

இதன்படி இந்தத் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிப் பேர், அதாவது 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் பதவி நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பின்னர், அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி பரிந்துரைப்பார்.