மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று (28) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுச்சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவமானது இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை மூங்கிலாற்று சங்கமத்தில் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
இவ்வாலயமானது கடந்த (08.08.2026) அன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இத்தீர்த்தமானது பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தமாகும்.இவ்வுற்சவ காலக்கிரிகைளில் ஈடுபடும் கப்புகனார் மற்றும் ஆராத்தி எடுக்கும் பெண்கள் சுவாமி தீர்த்தமாடிவிட்டு ஆலயத்திற்கு வாருகை தந்ததும் மயங்கி உணர்விழத்தலும் பின்னர் பெருமானின் தீர்த்தம் பருகி உணர்வு பெறுவதும் மெய்சிலிர்க்கச் செய்யும் காட்சிகளாகும்.
மண்டூர் முருகன் ஆலயமானது தெற்கு நோக்கிய பார்வையாக அமையப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இமய கண்டத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே இந்நிலையென கூறப்பட்டாலும் கதிர்காமம் நோக்கிய பார்வையாக இதனை கருதமுடியும்.
இவ் தீர்த்தோற்சவ நிகழ்வுகளில் நாட்டின் பலபாகங்களிலிருந்து பல்யிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
