மாநகர சபையுடன் ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் எச்சரித்துள்ளார்.
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது மாநகர சபை சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாக மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் மாநகர சபையின் தேசிய தூய்மைப்படுத்தும் வேலை திட்டத்திற்கு எதிராக வடிகான்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளவர்கள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது
இதனால் டெங்கு நோய் பரவ காரணமாக அமைகின்றது சம்பந்தப்பட்டவர்கள் ஒரு வார காலத்தினுள் மாநகர சபையின் தூய்மைப்படுத்தும் செயல் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்
இல்லாவிடில் மா நகர சபையின் சுகாதார வேலைத் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் வேலை திட்டத்தினை முன்னெடுக்க வேண்டி வரும்
மாவட்ட அபிவிருத்தி குழுத் தீர்மானத்திற்கமைவாக அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி உத்தரவுக்கு அமைவாக இராணுவத்தின் உதவியுடன் அரசாங்கத்தின் தூய்மைப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் இன்று தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு நகரில் ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு எஸ்.வரதராஜன்
